நாக்பூர் பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 1 முதல் மொபைல் செயலி மூலம் இறுதி ஆண்டு தேர்வு.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நாக்பூர் பல்கலைக்கழகம் அக்டோபர் 1 முதல் மொபைல் செயலி மூலம் இறுதி ஆண்டு தேர்வை நடத்தபடவுள்ளது.
கொரோனா தொற்றுநோயைத் தொடர்ந்து அக்டோபர் 1 முதல் நாக்பூர் பல்கலைக்கழகம் மொபைல் செயலி மூலம் இறுதி ஆண்டு தேர்வுகளை ஆன்லைனில் நடைபெறும் என அறிவித்துள்ளது. இதில், சுமார் 78,000 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர் என்று பல்கலைக்கழக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மாணவர்கள் ‘RTMNU Pariksha’ என்ற செயலியை கூகிள் பிளேஸ்டோரிலிருந்து தொலைபேசிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழக தேர்வு வாரிய இயக்குநர் பிரபுல்லா சபாலே தெரிவித்தார்.
பல்கலைக்கழக அட்டவணையின்படி அக்டோபர் 1 முதல் 18 வரை தேர்வுகள் நடைபெறுகிறது. பல்வேறு பாடங்களில் சுமார் 1.82 லட்சம் கேள்விகள் 1,852 ஆசிரியர்களால் அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். மேலும், ராஷ்டிரசந்த் துகாடோஜி மகாராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுபாஷ் சவுதாரி கூறுகையில், இந்த பயன்பாடு மாணவர்களுக்கு வசதியாக இருக்கும், மேலும் குறைந்த இணைய இணைப்பிலும் செயல்படும் என்றார்.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,
February 8, 2025![IND vs ENG 2nd ODI cricket match](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-vs-ENG-2nd-ODI-cricket-match.webp)
நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!
February 8, 2025![rohit sharma Kevin Pietersen](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-Kevin-Pietersen.webp)
“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!
February 8, 2025![](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-rohit-sharma-.webp)
டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!
February 8, 2025![narendra modi HAPPY](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/narendra-modi-HAPPY-.webp)