உடனடியாக பெட்ரோல் டேங்கை நிரப்புங்கள் – ராகுல் காந்தி ட்வீட்

Published by
பாலா கலியமூர்த்தி

நாட்டில் உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் உத்தரபிரதேசத்தில் 6 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இறுதி கட்ட வாக்குப்பதிவு வரும் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. மணிப்பூரில் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

மார்ச் 7-ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்து மார்ச் 10-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதனிடையே, 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து பல நாட்களாக நீடித்து வருகிறது. சென்னையைப் பொறுத்தவரையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையைப் பொறுத்தவரையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.91.43 ஆக உள்ளது. கடந்த நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

கச்சா எண்ணெய் விலை ஒருபக்கம் உயர்ந்துகொண்டே சென்று தற்போது பேரலுக்கு 111 டாலரை தொட்டுள்ளது. இருப்பினும் 5 மாநில தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யவில்லை என்றும் 5 மாநில தேர்தல் தேர்தல் முடிந்தபின் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அதன்படி, இந்தியாவில் பெட்ரோல் விலை கிட்டத்தட்ட 12 முதல் 15  ரூபாய் வரை உயரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், அடுத்த வாரம் மாநில சட்டமன்ற தேர்தல்கள் முடிவடையும் நிலையில், பெட்ரோல் டீசல் விலை தினசரி தொடர்ந்து உயரும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,  மக்களே உடனடியாக பெட்ரோல் டேங்கை முழுவதுமாக நிரப்புங்கள். பிரதமர் மோடியின் அரசின் தேர்தல் சலுகைகள் முடிவுக்கு வரப்போகிறது என தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

9 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

9 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

9 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

10 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

10 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

10 hours ago