அமைச்சரின் மகனையே கைது செய்த பெண் காவலரான சுனிதா யாதவ் ராஜினாமா செய்தததாக கூறியுள்ளார்.
குஜராத்தில் பாஜக அமைச்சராக உள்ள குமார் கனானியின் மகனான பிரகாஷ் கனானி மற்றும் அவரது நண்பர்கள் சூரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றி திரிந்துள்ளனர். அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்ட பெண் காவலர் சுனிதா யாதவ் அவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது. அதன் பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
அமைச்சரின் மகனையே கைது செய்து துணிச்சலுடன் செயல்பட்ட சுனிதாவிற்கு பாராட்டுகள் குவிந்தன. அதனையடுத்து சுனிதா உடல்நிலை சரியில்லாமல் விடுப்பில் சென்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய சுனிதா யாதவ், எனது உயர் அதிகாரிகளிடமிருந்து ஆதரவு கிடைக்காததால் நான் ராஜினாமா செய்து விட்டேன். நான் ஒரு கான்ஸ்டபிள் என்ற முறையில் எனது கடமையை செய்தேன்.
அமைச்சரின் மகனை போல முக்கியமான நபர்களாக நினைப்பது நமது அமைப்பின் தவறு என்று கூறியுள்ளார். இதற்கு சூரத் போலீஸ் கமிஷனர், அவர் ராஜினாமா வழங்கவில்லை என்றும் விசாரணை இன்னும் நடந்து வருவதாகவும், இந்த சூழலில் அவர் ராஜினாமா செய்ய முடியாது என்று கூறி மறுத்துள்ளார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…