அமைச்சரின் மகனையே கைது செய்த பெண் காவலரான சுனிதா யாதவ் ராஜினாமா செய்தததாக கூறியுள்ளார்.
குஜராத்தில் பாஜக அமைச்சராக உள்ள குமார் கனானியின் மகனான பிரகாஷ் கனானி மற்றும் அவரது நண்பர்கள் சூரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றி திரிந்துள்ளனர். அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்ட பெண் காவலர் சுனிதா யாதவ் அவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது. அதன் பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
அமைச்சரின் மகனையே கைது செய்து துணிச்சலுடன் செயல்பட்ட சுனிதாவிற்கு பாராட்டுகள் குவிந்தன. அதனையடுத்து சுனிதா உடல்நிலை சரியில்லாமல் விடுப்பில் சென்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய சுனிதா யாதவ், எனது உயர் அதிகாரிகளிடமிருந்து ஆதரவு கிடைக்காததால் நான் ராஜினாமா செய்து விட்டேன். நான் ஒரு கான்ஸ்டபிள் என்ற முறையில் எனது கடமையை செய்தேன்.
அமைச்சரின் மகனை போல முக்கியமான நபர்களாக நினைப்பது நமது அமைப்பின் தவறு என்று கூறியுள்ளார். இதற்கு சூரத் போலீஸ் கமிஷனர், அவர் ராஜினாமா வழங்கவில்லை என்றும் விசாரணை இன்னும் நடந்து வருவதாகவும், இந்த சூழலில் அவர் ராஜினாமா செய்ய முடியாது என்று கூறி மறுத்துள்ளார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…