நடிகை போல வாக்குசாவடிக்கு வந்த பெண் அதிகாரி! ஒரே நாளில் நாடு முழுவது பரவிய புகைப்படம்

Published by
murugan

மஞ்சள் நிற புடவையில் நடிகை போல தேர்தல் பணிக்கு வந்த பெண் தேர்தல் அதிகாரி. உத்திரபிரதேசம் மாநிலம் தியோரிய பகுதியை சார்ந்த ரீனா திவிவேதி (32) இவர் பொதுபணிதுறையில் ஜூனியர் அசிஸ்டெண்ட்டாக பணி செய்து வரும் இவருக்கு லக்னோவில் தேர்தல் பணி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதற்காக லக்னோவில் தங்கி அங்கு உள்ள வாக்குசாவடியில் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் தான் பணி புரியும் வாக்குச்சாவடிக்கு வாக்கு பதிவு இயந்திரத்தை எடுத்து கொண்டு சென்றார். அப்போது அவர் அணிந்து இருந்த உடை பார்த்து பலர் ஆச்சரியம் அடைந்தனர்.

வாக்குசாவடிக்கு ரீனா திவிவேதி மஞ்சள் நிற உடையில் பார்ப்பதற்கு சினிமா நடிகை போல வாக்கு பதிவு இயந்திரத்தை எடுத்து கொண்டு வந்து உள்ளார்.ரீனா திவிவேதி பார்த்த சிலர் அவரை புகைப்படம் எடுத்து அப்புகைப்படத்தை சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு உள்ளனர்.

ரீனா திவிவேதி புகைப்படத்தை பதிவிட்ட சில மணி நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் அவரது புகைப்படத்தை பகிர்ந்து உள்ளனர்.இதனால் ஒரே நாளில் நாடு முழுவதும் சமூக வலைத் தளங்களில்  “உமன் ஆன் யெல்லோ சாரி”என்ற ஹேஷ் டேக்குடன் இவரது புகைப்படம் பரவியது.

இது குறித்து ரீனா திவிவேதி கூறுகையில் , “எனக்கு 32 வயது ஆகிறது.என் மகன் 9 -ம் வகுப்பு படிக்கிறான் .இத்தனை வயதுக்கு பிறகு எனது புகைப்படத்தை பலரால் பகிரப்பட்டதும் , மற்றவர்களின் கவனம் என் மீது திரும்புவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் இந்த சில நாள்களில் நான் சினிமா நட்சத்திரம்  போல மாறியதாக உணருகிறேன்”என கூறினார்.

Published by
murugan

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

2 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

2 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

2 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

2 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

3 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

3 hours ago