கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, கொரோனா நோய்க்கு எதிராக கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள் அருகில் உள்ள கொரோனா தடுப்பூசி மையங்களுக்கு சென்று பதிவு செய்தோ அல்லது கோவின் இணையதளத்தில் பதிவு செய்தோ தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் அனைத்து நெறிமுறைகளும் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் கர்ப்பிணி பெண்களுக்கு எந்தவித பக்கவிளைவும் சோர்வும் ஏற்படாது என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். தற்போது கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அதிகாரபூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…