இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசியை 25 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய வெளியுறவுத் துறை அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த ஒரு வருட காலங்களாக உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸின் வீரியத்தையும், இதனால் ஏற்படும் பாதிப்புகளையும் குறைக்கும் வகையில் பல்வேறு நாடுகள் இதற்கான தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகளை கண்டறிந்து வந்தது. அதில் ஒன்றாக சீரம் நிறுவனத்துடன் இணைந்து இந்தியா கண்டறிந்துள்ள கோவிஷீல்ட் எனும் கொரோனா தடுப்பூசிக்கு தற்பொழுது அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த மாதம் முதலே இந்தியாவில் முன் களப்பணியாளர்கள் மற்றும் மருத்துவகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிற நாடுகளுக்கும் இந்தியா நன்கொடையாக தடுப்பூசிகளை வழங்கி வரும் நிலையி,ல் இந்த மாதம் 2.40 கோடி கொரோனா தடுப்பூசிகளை 25 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதில் சவுதி அரேபியா, பிரேசில், மொராக்கோ, மியான்மர், நேபாளம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 2.40 கோடி கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இதில் 13 நாடுகளுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட உள்ளதாம்.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…