தூக்க மாத்திரை கொடுத்து மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை.!தற்கொலை செய்ய முயன்ற பெண்.!

Published by
Ragi

தூக்க மாத்திரை கொடுத்து சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பல இடங்களில் சிறுமிகள் உட்பட பலர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பெங்களூரில் உள்ள 40 வயதான ஒருவர் தனது 19 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் தனது தந்தை மற்றும் இரண்டாம் தாயுடன் வசித்து வருகிறார் 19வயதான பெண் . கடந்த செவ்வாய் கிழமை இரவு சளி  தொல்லையால் அவதிப்படுவதை அடுத்து தனது தந்தையிடம் கூறியுள்ளார்.அவரும் 19 வயதான மகளுக்கு சளிக்கான மாத்திரை என்று கூறி தூக்க மாத்திரை கொடுத்துள்ளார்.காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் தனது அருகில் தந்தை படுத்திருப்பதை கண்ட அந்த பெண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதை உணர்ந்துள்ளார். உடனடியாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தனது இரண்டாவது அம்மாவிடம் கூறியுள்ளார். ஆனால் அவரோ அவள் கூறியதை புறக்கணித்துள்ளார். உடனே அந்த பெண் கழிவறையை சுத்தப்படுத்தும் ரசாயனத்தை குடித்து விட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார் .விஷத்தை குடித்து விட்டு நேராக காவல் நிலையத்திற்கு சென்று தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார். அதை தொடர்ந்து அந்த பெண்ணை St.Johns மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.பெண்ணின் புகாரை அடுத்து தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Published by
Ragi

Recent Posts

நாய் வளர்ப்போர் கவனத்திற்கு., ரூ.1000 அபராதம்! இதை செய்ய மறந்துடாதீங்க..,

நாய் வளர்ப்போர் கவனத்திற்கு., ரூ.1000 அபராதம்! இதை செய்ய மறந்துடாதீங்க..,

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 75 நாட்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள்…

15 minutes ago

“மகா கும்பமேளா., இந்தியாவின் பிரமாண்டத்தை உலகமே பார்த்தது!” பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இராண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விகள் , அதற்கான…

20 minutes ago

500 குழந்தைகள் மையங்கள் அமைக்க ஏற்பாடு – அமைச்சர் கீதா ஜீவன் பேரவையில் தகவல்.!

சென்னை : 2025 - 26ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான 2ம் நாள் விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில்,…

34 minutes ago

தொகுதி மறுசீரமைப்பு : “நாங்கள் தினமும் இதை செய்கிறோம்., ஏற்க மறுகிறாரக்ள்” கனிமொழி கண்டனம்!

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் அதன் நாடாளுமன்ற…

51 minutes ago

சென்னையை அதிர வைத்த இரட்டை கொலை! அடுத்தடுத்து 13 பேர் கைது., ரகசிய விசாரணை!

சென்னை : நேற்று முன்தினம் சென்னை கோட்டூர்புரம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

2 hours ago

“பிற்படுத்தப்பட்டோருக்கு 42% இடஒதுக்கீடு”- தெலுங்கானா சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்.!

ஹைதிராபாத் : தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகு, பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நேற்றைய தினம்…

3 hours ago