வறுமை காரணமாக 5 வருடங்களில் 5 குழந்தைகளை கொன்ற தந்தை.!

Default Image

ஹரியானாவில் ஜிந்த் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் ஜும்மா கூலி தொழிலாளியாக உள்ளார். அவரது இரண்டு மகள்களும் ஜூலை 17 அன்று காணாமல் போயுள்ளனர்.  இந்நிலையில், ஒரு மகளின் உடல்  கிராமத்திற்கு அருகிலுள்ள ஹன்சி-புட்டானா இணைப்பு கால்வாயிலிருந்து மீட்கப்பட்டது. மற்றொறு கிராமத்தின் மற்றொரு மகளின் உடல் கிராமத்திற்கு வெளியே மீட்கப்பட்டது.

ஜும்மா கிராம பஞ்சாயத்தில் தனது மகளை கொலை செய்ததாக  ஒப்பு கொண்டார். மேலும், ஜும்மா தனது மூத்த மகனை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்ததாகவும், தனது மற்றொரு மகன் மற்றும் ஒரு மகளை கொலை செய்ததை பஞ்சாயத்தில் அவர் ஒப்புக்கொண்டார்.

வறுமை காரணமாக இந்த கொலைகளை செய்தேன் என கூறினார். இதனால், அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் போலீசாரிடம் தகவல் கொடுத்தனர். பின்னர்,போலீசார் ஜும்மாவை கைது கைது செய்து   தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்