ஜெய்ப்பூரில் மது அருந்துவதற்காக தனது 2 வயது மகளை விற்பனை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் ஜெய்ப்பூரில் வசிக்கும் ரமேஷ் என்பவர் மதுவிற்கு அடிமையாகி தனது 2 வயது இளைய குழந்தையை விற்றுள்ளார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளன. கடந்த மாதம் இவருக்கும் இவரது மனைவிக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வருவதை நிறுத்த கூறிய மனைவியை உடல்ரீதியாக தாக்கி வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார். பின்னர், ரமேஷ் தனது 2 வயது இளைய குழந்தையை குழந்தை இல்லாத தம்பதிக்கு ரூ.5,000-க்கு விற்பனை செய்துள்ளார்.
ரமேஷின் தந்தை ரவீந்திர பாரிக், இளைய பேத்தியை காணவில்லை என்பதால் ரமேஷிடம் விசாரித்துள்ளார். ரமேஷ் கூற மறுக்க, அதில் சந்தேகம் ஏற்பட்டு குழந்தையை தேடும் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் 2 வயது சிறு குழந்தையை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க இயலாததால், மீண்டும் ரமேஷிடம் குழந்தை காணாமல் போனதுக்கு அவரை குற்றம் சாட்டியிருக்கிறார்.
பின்னர், பணத்திற்காக குழந்தையை கொடுத்ததாக ரமேஷ் ஒப்புக்கொண்டுள்ளார். அதனை அடுத்து, பாரிக் பிஞ்சராப்பூர் போலீசில் ரமேஷ் மீது மனித கடத்தல் காரணமாக புகார் அளித்துள்ளார். பின்னர், காவல் துறையினர் ரூ.5,000 கொடுத்து வாங்கிய மிது ஜெனாவின் வீட்டிற்கு சென்று குழந்தையை பத்திரமாக மீட்டு குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்துள்ளனர்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…