பேஸ்புக்  மூலம் கொலையாளியை வேலைக்கு அமர்த்தி தந்தையை கொன்ற மகன்!!

Published by
Dhivya Krishnamoorthy

மத்திய பிரதேசத்தில் பேஸ்புக் மூலம் கொலையாளியை வேலைக்கு அமர்த்தி பணத்திற்காக தனது 59 வயது தந்தையை கொலை செய்ததாக அங்கித் (32), அவரது நண்பர் நிதின் லோதி மற்றும் பீகாரைச் சேர்ந்த கொலையாளி அஜித் சிங் ஆகிய 3 பேரை கைது செய்ததாக இன்று போலீசார் தெரிவித்தனர்.

மகேஷ் குப்தா(59), ஜூலை 21-22 இடைப்பட்ட இரவில், மாவட்ட தலைமையகத்திலிருந்து 75 கிமீ தொலைவில் உள்ள பிச்சோர் நகரில் உள்ள தனது வீட்டின் அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார் என்று காவல்துறை கண்காணிப்பாளர் (SP) ராஜேஷ் சிங் சண்டேல் தெரிவித்தார்.

குப்தாவின் மனைவி சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், அவர் தனது மகனுடன் வசித்து வந்ததாகவும் போலீசார் மேலும் தெரிவித்தனர். ராணுவத்தில் இருந்த அவரது மற்றொரு மகன் அனில் குப்தா தற்கொலை செய்து கொண்டதால், குப்தா சமீபத்தில் ₹ 1 கோடி இழப்பீடு பெற்றார் என்றும் அவர் ஓய்வூதியம் பெறுவதையும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.

வழக்கின் விசாரணையில், அங்கித் மது போதை மற்றும் சூதாட்டம் மற்றும் பிற குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் அவரது தந்தை பணம் தர மறுத்துள்ளார். அதனால் கோபமடைந்த அவர் தனது தந்தையை கொலை செய்ய முடிவு செய்தார்.

பீகாரைச் சேர்ந்த ‘அஜித் கிங்’ என்ற மற்றும் அவரது கும்பலை தனது தந்தையைக் கொள்வதற்காக ஃபேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு, ரூ. 1 லட்சம் தருவதாக உறுதியளித்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார். பின் அந்த கும்பலை வைத்து குப்தாவை கொன்றுவிட்டு அடையாளம் தெரியாத சிலர் தனது தந்தையைக் கொன்றதாக அங்கித் அக்கம் பக்கத்தினர் மற்றும் காவல்துறையினரிடம் காலையில் கூறியதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி கூறினார்.

Published by
Dhivya Krishnamoorthy

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

11 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

11 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago