உலகையே அச்சுறுத்தும் ஒமிக்ரான்;இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 35 ஆக உயர்வு!

Published by
Edison

கொரோனா வைரஸின் திரிபான ஒமிக்ரான் தொற்று ஆந்திராவில் ஒருவருக்கும்,சண்டிகரில் ஒருவருக்கும் கண்டறியப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் முன்னதாக கொரோனா தீவிரமாகப் பரவிய நிலையில்,தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.இதன்மூலம்,தற்போது கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது.

ஆனால்,தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில்,  இந்த வைரசுக்கு ஒமிக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.

இந்த வைரஸ் தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. எனவே தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் ரத்து செய்து வருகின்றன.

இதனைத் தொடர்ந்து,இந்தியாவிலும் ஒமிக்ரான் தொற்று பரவத் தொடங்கியுள்ளது.அதன்படி,மகாராஷ்டிரா 17 பேருக்கும், ராஜஸ்தானில் 9 பேருக்கும், டெல்லியில் 2 பேருக்கும், குஜராத்தில் 3 பேருக்கும், கர்நாடகாவில் 2 பேருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,தற்போது ஆந்திராவிலும் முதல் முறையாக ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆந்திரா மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

“34 வயதான வெளிநாட்டுப் பயணி ஒருவர் அயர்லாந்தில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்து, சோதனை செய்ததில்,கொரோனா ஆர்டி-பிசிஆர் சோதனையில் நெகட்டிவ் என கண்டறியப்பட்டது. அவர் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு 27.11.2021 அன்று விசாகப்பட்டினம் வந்தார்.

அதன்பின்னர்,விஜயநகரத்தில் மீண்டும் சோதனை நடத்தியதில், RTPCR சோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவரது மாதிரி ஜீனோம் சீக்வென்சிங்கிற்காக ஹைதராபாத்தில் உள்ள CCMB க்கு அனுப்பப்பட்டது மற்றும் முடிவு ஒமிக்ரான் பாசிட்டிவ் என அறிவிக்கப்பட்டது.இது ஆந்திரப் பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட முதல் ஒமிக்ரான் வழக்கு. ஆனால்,அவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை மற்றும் 11.12.2021 அன்று மீண்டும் சோதனை செய்யப்பட்டார், மேலும் RT-PCR முடிவு கொரோனாவுக்கு எதிர்மறையாக இருப்பது கண்டறியப்பட்டது.

இதுவரை மொத்தம் 15 வெளிநாட்டுப் பயணிகளுக்கு கொரோனா RTPCR பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டது.மேலும் அனைத்து 15 மாதிரிகளும் மரபணு வரிசைப்படுத்தலுக்காக CCMB க்கு அனுப்பப்பட்டன. முழு மரபணு வரிசைமுறை அறிக்கைகள் 10 வழக்குகளில் பெறப்பட்டன, அவற்றில் ஒன்று மட்டுமே ஒமிக்ரான் என அடையாளம் காணப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வதந்திகளை நம்பி கவலைப்பட வேண்டாம் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சமூக இடைவெளியை பின்பற்றவும், முகமூடி அணிதல், கைகளை தவறாமல் கழுவுதல் போன்றவற்றை பின்பற்றவும்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,சண்டிகரிலும் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இதன்மூலம்,இந்தியாவில் ஒமிக்ரான் மொத்த பாதிப்பு 35 ஆக உயர்ந்துள்ளது.

Recent Posts

வெளியானது 10ம் வகுப்பு ரிசல்ட்! அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற டாப் 5 மாவட்டம்?

வெளியானது 10ம் வகுப்பு ரிசல்ட்! அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற டாப் 5 மாவட்டம்?

சென்னை : தமிழகத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 16 (இன்று) காலை 9:00 மணிக்கு…

6 minutes ago

மாணவர்களே 10-ஆம் வகுப்பு ரிசல்ட் வந்தாச்சு…எப்படி பார்க்கலாம்?

சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச்  28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத்…

34 minutes ago

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

16 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

16 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

17 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

17 hours ago