டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஸ்வெட்டர் மற்றும் ஜாக்கெட்டுகளை விவசாயின் மகன் வழங்கி உதவியுள்ளார்.
மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா ,குஜராத் , உத்தரப்பிரதேசம் மற்றும் பல மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் 16-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.அந்த சட்டங்களை ரத்து செய்ய கோரி டெல்லி-ஹரியானா எல்லையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஸ்வெட்டர் மற்றும் ஜாக்கெட்டுகளை விவசாயின் மகன் ஒருவர் இலவசமாக வழங்கி உதவியுள்ளார்.
உத்திரப்பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்திலுள்ள விவசாயி ஒருவரின் மகனான ஷகீல் முகமது குரேஷி என்ற நபர் வடக்கு டெல்லியின் நரேலாவில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார் .இவர் தினமும் காலை 8 மணியளவில் சாலையோரத்தில் உள்ள தனது கடையை திறந்து விவசாய போராட்டத்தில் குளிரில் நடுங்கும் விவசாயிகளுக்கு சுமார் 300 ஜாக்கெட்டுகள் மற்றும் ஸ்வெட்டர்களை இலவசமாக வழங்கியுள்ளார் .இது குறித்து குரேஷி கூறுகையில் என் தந்தையும் ஒரு விவசாயி,எனவே அவர்களின் வாழ்க்கை மிகவும் கடினமானது என்பது தனக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.
மேலும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ,சில தனி நபர்களும் விவசாயிகளின் உணவு உள்ளிட்ட அன்றாட தேவைகளையும் விநியோகித்து வருகின்றனர்.மேலும் சிலர் மருத்துவ முகாம்களையும் அமைத்து விவசாயிகளுக்கு உதவி செய்து வருகின்றனர்.
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…