பாஜக அரசின் ஆணவத்தை விவசாயிகள் அழிப்பார்கள் என காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெறும் விவசாயிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். இந்நிலையில் நேற்று காங்கிரஸ் சார்பில் மதுராவில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்திலும் பிரியங்கா காந்தி கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், பாஜக அரசு தனது ஆணவத்தில் விவசாயிகளுக்கு பலன் அளிக்காத சில சட்டங்களை விதித்து வருவதாக கூறியுள்ளார்.
மேலும், பாஜக அரசின் ஆணவத்தை விவசாயிகள் உடைத்து எரிவார்கள் எனவும் தெரிவித்துள்ள அவர், அரசு மற்றும் பிரதமரின் கடமை விவசாயிகளின் குரலைக் கேட்பதும் அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க முயற்சி எடுப்பது தான். ஆனால் விவசாயிகளுக்கு எதிரான இழிவான சொற்களை பயன்படுத்துவது பாவம். அரசாங்கத்தை அமைக்க கூடிய விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்க வேண்டிய கடமை இருக்கும்பொழுது, தலைவர் திமிர்த்தனமாக இருந்தால் அவருடைய கொள்கைகள் மக்களுக்கு நன்மை பயக்காது என தெரிவித்துள்ளார்.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…