புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தி, வருகிற செப்டம்பர் 27-ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரியும் டெல்லி எல்லைப் பகுதியில் கடந்த 9 மாதங்களாக விவசாயிகள் பலர் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவசாயிகளுடன் பத்து சுற்று பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு மேற்கொண்டாலும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் 40 விவசாய சங்கங்கள் அடங்கிய சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற அமைப்பின் சார்பில் கிசான் மகா பஞ்சாயத்து எனும் விவசாயிகள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் உள்ள அரசு கல்லூரி மைதானத்தில் இந்த மாநாடு நடைபெற்றது. இதில் உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, கர்நாடகா உள்ளிட்ட 15 மாநிலங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளை சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பாரதீய கிசான் சங்கம் செய்தி தொடர்பாளர் ராகேஷ் திகாயத் பேசுகையில் நாடு விற்பனை செய்யப்படுவதை நாம் தடுக்க வேண்டும். இந்த மாநாட்டின் நோக்கமே நமது விவசாயமும், நாடும் காக்கப்பட வேண்டும் என்பது தான் எனவும், மேலும், இது போன்ற மாநாடுகள் நாடு முழுவதும் நடத்தப்படும் எனவும் அவர் பேசியுள்ளார்.
மேலும், மத்திய அரசையும், உத்தரபிரதேச மாநில அரசையும் கடுமையாக விமர்சித்து பேசிய அவர், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி, வருகிற 27-ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் எனவும் விவசாய சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…