Categories: இந்தியா

விவசாயி உயிரிழப்பு.. இரண்டு நாட்களுக்கு பேரணி ஒத்திவைப்பு..!

Published by
murugan

அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க சட்டம் இயற்ற வேண்டும், விவசாயக் கடன் தள்ளுபடி, சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முடிவடைந்த 4-ம் கட்ட  பேச்சுவார்த்தையின் போது, ​​மூன்று மத்திய அமைச்சர்கள் கொண்ட குழு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு சோளம் மற்றும் பருத்தி ஆகிய ஐந்து பயிர்களை விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் ஐந்து ஆண்டுகளுக்கு அரசு கொள்முதல் செய்யும் என தெரிவித்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்து மீண்டும் போராட்டத்தை விவசாயிகள் நேற்று தொடங்கினர்.

நேற்று பிற்பகல் மத்திய விவசாய அமைச்சர் அர்ஜுன் முண்டா 5-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக அறிவித்தார். மேலும், போராட்டக்காரர்கள் அமைதி காக்கவும், பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும் வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில், பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உள்ள இரண்டு போராட்டத் தளங்களில் ஒன்றான கானௌரியில் நேற்று நடந்த மோதலில் ஒரு விவசாயி உயிரிழந்தார்.

மேலும் 12 போலீஸார் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து, விவசாயிகள் தலைவர்கள் ‘டெல்லி சலோ’ பேரணி இரண்டு நாட்களுக்கு ஒத்திவைத்தனர். விவசாயிகளின் தலைவர் சர்வான் சிங் பாந்தர், ஷம்புவில் செய்தியாளர்களிடம் பேசியபோது” கனௌரி மற்றும் ஷம்பு எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல்துறை நடத்திய அட்டூழியங்களை நாங்கள் கண்டிக்கிறோம்.

கரும்பு கொள்முதல் விலையை 8% உயர்த்திய மத்திய அரசு ..!

உயிரிழந்தவர் பஞ்சாபின் பதிண்டா மாவட்டத்தில் உள்ள பலோக் கிராமத்தைச் சேர்ந்த சுப்கரன் சிங் (21) என தெரியவந்துள்ளது. இதற்கிடையில் ஹரியானா காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், விவசாயிகள் நடத்திய மோதலில் சுமார் 12 போலீசார்  கற்களால் தாக்கப்பட்டதில் காயமடைந்தனர் என தெரிவித்தார்.  இந்த சம்பவத்திற்கு பதிலளித்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், போராட்டக்காரர்களின் குடும்பத்திற்கு பஞ்சாப் அரசு நிதியுதவி அளிக்கும் என்று உறுதியளித்தார். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு எப்ஐஆர் பதிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

5 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

7 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

8 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

8 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

9 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

9 hours ago