விமான பாதுகாப்பு பணிகளுக்கான கட்டணம் உயர்வு – விமான போக்குவரத்துக்கு அமைச்சகம் முடிவு!

Published by
Rebekal

விமான நிலையத்துக்கான பாதுகாப்பு கட்டணத்தை பயணிகளிடமிருந்து உயர்த்தி வசூலிக்க விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக இயங்காமல் இருந்த விமானங்கள் தற்போது சில கட்டுப்பாடுகளுடன் இயங்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களை பாதுகாக்கும் பணிகளுக்காக விமான சேவை நிறுவனங்கள் பயணிகளிடமிருந்து டிக்கெட் கட்டணத்துடன் சேர்த்து பாதுகாப்புக்கான கட்டணத்தையும் வசூலித்து அதை மத்திய அரசுக்கு செலுத்தி வருகின்றது.

இந்நிலையில் உள்நாட்டு விமான போக்குவரத்தில் விமான நிலைய பாதுகாப்பு கட்டணம் ஏற்கனவே இருந்த 150 ரூபாய் உடன் பத்து ரூபாய் அதிகரிக்கப்பட்டு 160 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமான போக்குவரத்தை பொருத்தவரை 243 ரூபாயாக இருந்த பாதுகாப்பு கட்டணம் முன் 366 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…

5 hours ago

“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!

பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…

5 hours ago

“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…

6 hours ago

பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!

சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…

8 hours ago

சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!

சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…

8 hours ago

போட்டியில் வென்ற மழை.! பாகிஸ்தான் – வங்கதேசத்திற்கு கிடைத்த ஆறுதல் பாய்ண்ட்.!

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…

9 hours ago