இன்ஸ்டாகிராம் புரொஃபைலை நீக்கிய ஆர்யன் கான்…குழப்பத்தில் ரசிகர்கள்..!

Published by
Edison

சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு ஆர்யன் கான் தனது இன்ஸ்டாகிராம் சுயவிவரப் படத்தை நீக்கியதால் அவரது ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் ஆர்தர் ரோடு சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தனது இன்ஸ்டாகிராம் சுயவிவரப் படத்தை நீக்கிவிட்டார். 23 வயதான அவர் இன்ஸ்டாகிராமில் 1.9 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்தார்.எனினும்,ஆர்யன் இன்ஸ்டாகிராமை அதிகம் பயன்படுத்தும் நபர் அல்ல.ஏனெனில், 2013 ஆம் ஆண்டு முதல் இன்ஸ்டாகிராமில் சேர்ந்ததிலிருந்து 24 போஸ்டுகள் மட்டுமே பகிர்ந்துள்ளார்.இந்த நிலையில்,சமூக ஊடக தளத்திலிருந்து தனது புகைப்படத்தை நீக்கியுள்ளார்.இதனால்,அவரது ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

மும்பை சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் இருந்தது தொடர்பான வழக்கில் ஆர்யன் கானை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) அக்டோபர் 3 ஆம் தேதி கைது செய்தனர். ஆர்யனின் நண்பர் அர்பாஸ் மெர்ச்சன்ட் மற்றும் இளம் மாடல் முன்முன் தமேச்சா உள்ளிட்ட சிலரையும் என்சிபி கைது செய்தது.இதனையடுத்து,ஆர்தர் ரோடு சிறையில் ஒரு மாத காலம் சிறைவாசம் அனுபவித்துவிட்டு கடந்த சனிக்கிழமை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு வீடு திரும்பிய ஆர்யன் கான், வீட்டுக்கு வெளியே பட்டாசுகளை வெடித்து,ரசிகர்களால் வரவேற்கப்பட்டார்.

எனினும்,சட்ட விரோத நடவடிக்கைகளில் இனி ஈடுபடாமல் இருப்பது,ஒரு லட்சம் ரூபாய் பிணைத் தொகை வழங்குவது,சாட்சியங்களை கலைக்காமல் இருப்பது,குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளாமல் இருப்பது,பாஸ்போர்ட் ஆவணத்தை சிறப்பு நீதிமன்றத்திடம் சமர்பிப்பது,வழக்கு தொடர்பாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கருத்து வெளியிடாமல் இருப்பது,மும்பை நகரத்தை விட்டு வெளியே செல்ல முயன்றால் விசாரணை அதிகாரியிடம் தெரிவித்துவிட்டுச் செல்வது என பல்வேறு நிபந்தனைகளின்கீழ் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து,ஆர்யன் வெளியான பிறகு கரண் ஜோஹர், ஷனாயா கபூர், ஹன்சல் மேத்தா உள்ளிட்டோர் சமூக ஊடகங்களில் அன்பை பகிர்ந்தனர். அதே நேரத்தில் அவரது சகோதரி சுஹானா கான் இன்ஸ்டாகிராமில் தம்பியுடனான தனது அன்பை வெளிப்படுத்த அவர்களின் குழந்தைப் பருவத்திலிருந்து ஒரு படத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

என்னை பத்தி ஏன் பேசுறீங்க? அன்புமணி பேச்சால் கடுப்பான மயிலாடுதுறை எம்.பி. சுதா!

என்னை பத்தி ஏன் பேசுறீங்க? அன்புமணி பேச்சால் கடுப்பான மயிலாடுதுறை எம்.பி. சுதா!

சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…

7 minutes ago

ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!

டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது  பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…

1 hour ago

NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…

2 hours ago

தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?

சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…

2 hours ago

தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?

சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…

3 hours ago

வழக்குக்கு பயந்து மத்திய அரசுக்கு மண்டியிடுவதுதான் கோழைத்தனம்! அன்புமணி பேச்சுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி!

சென்னை : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசிய விஷயம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.…

3 hours ago