பஞ்சாப் மாநிலம்,ஜலந்தரில் உள்ள மல்லியன் குர்த் கிராமத்தில் நேற்று கபடி போட்டியின் போது பிரபல சர்வதேச கபடி வீரர் சந்தீப் சிங் நங்கலை குறிவைத்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பக்கியால் சுடத் தொடங்கினர்,இதல் சுமார் 20 குண்டுகள் சந்தீப்பின் தலை மற்றும் மார்புப் பகுதியில் பாய்ந்தத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.அவரை சிலர் துப்பாக்கியால் சுடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.அதில் அவரை மர்மநபர்கள் சுடும்போது மக்கள் ஓடுவதைக் காண முடிந்தது.ஷாகோட்டின் மல்லியன் கலான் கிராமத்தில் சந்தீப் நங்கல் கபடி போட்டி விளையாடிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்தது.
சந்தீப்,கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பஞ்சாப் மட்டுமல்லாமல் அமெரிக்கா,கனடா,இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கபடி போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடி வருகிறார்.
மேலும்,அவர் பெரிய லீக் கபடி கூட்டமைப்பை கவனித்து வருவதாகவும், அவருக்கும் கூட்டமைப்பிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.எனினும்,இது குறித்த முழு தகவல் காவல்துறையினரின் விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் என கூறப்படுகிறது.
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…