இந்திய விளையாட்டு துறையின் மிகப்பெரிய ஜாம்பவான் மற்றும் நாட்டின் முதல் டிராக் அண்ட் ஃபீல்ட் சூப்பர் ஸ்டார்,மில்கா சிங் கொரோனாவால் காலமானார்.
புகழ்பெற்ற இந்திய ஸ்ப்ரிண்டர் மில்கா சிங் கடந்த ஒரு மாத காலமாக கொரோனாவுக்கு எதிராக சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள கொரோனாவுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியேறிய இரண்டு நாட்களுக்குப் பிறகு சிங் வெள்ளிக்கிழமை காலமானார்.
இதுகுறித்து சிங்கின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “2021 ஜூன் 18 ஆம் தேதி இரவு 11:30 மணிக்கு மில்கா சிங் ஜி காலமானார் என்பதை நாங்கள் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம்”
“அவர் கொரோனாவை எதிர்த்து கடுமையாகப் போராடினார், கடவுளுக்கு அவருடைய வழிகள் உள்ளன, அது உண்மையான அன்பும் தோழமையும் தான்,எங்கள் தாய் நிர்மல் ஜி மற்றும் இப்போது அப்பா இருவரும் 5 நாட்களில் காலமானார்கள் என்பது உண்மையான அன்பும் தோழமையும் தான்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மில்கா சிங் கடந்த மாதம் காய்ச்சல் மற்றும் ஆக்ஸிஜன் அளவு குறைவு உள்ளிட்ட சிக்கல்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் புதன்கிழமை தான் வைரஸுக்கு எதிர்மறையை பரிசோதித்து வீடு திரும்பிய 2 நாட்களில் காலமாகியுள்ளார்.
மில்காவின் 85 வயதான மனைவி நிர்மல் கவுரும் வைரஸால் பாதிக்கப்பட்டு, மொஹாலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.மில்கா சிங் இறப்பு பற்றி பிரதமர் மோடி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் நாம் “ஸ்ரீ மில்கா சிங் ஜி என்ற ஒரு பெரிய விளையாட்டு வீரரை இழந்துவிட்டோம்,என்று ட்வீட் செய்துள்ளார்.
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…