கணவனை கொன்ற கொலையாளியாக இருந்தாலும் கூட மனைவி குடும்ப ஓய்வூதியத்தினை பெறுவதற்கு தகுதியானவர் தான் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2008 ஆம் ஆண்டிலுள்ள ஒரு கொலை வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் கணவனை கொலை செய்த குற்றவாளியாக இருந்தாலும் கூட அந்த பெண் குடும்ப ஓய்வூதியத்தை பெறுவதற்கு தகுதியானவர் தான் என பரபரப்பான கருத்துக்களை கூறியுள்ளது. குடும்ப ஓய்வூதியம் என்பது அரசு ஊழியர் ஒருவர் இறந்துவிட்டால் வழங்கப்படக்கூடிய ஒரு நிதி உதவி.
இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள தர்செம் சிங் என்பவர் 2008 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட நிலையில், அதற்கான குற்றவாளி அவரது மனைவி தான் என 2011 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு வரை குடும்ப ஓய்வூதியத்தை பெற்று வந்த கொலை செய்யப்பட்ட தர்செம் சிங்கின் மனைவி பால்ஜீத் கவுருக்கு, திடீரென ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஹரியானா அரசாங்கத்தின் மீது போடப்பட்ட வழக்கு குறித்த விசாரணையில், குற்றவாளியாக இருந்தாலும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படலாம் என தற்பொழுது உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை அடுத்து கொடுக்கப்படாமல் நிலுவையில் இருந்த தொகையையும், இனி உள்ள ஓய்வூதியத்தையும் முறையாக வழங்க வேண்டும் என இது சம்மந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…