கொலையாளியாகவே இருந்தாலும் மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படலாம் – உயர்நீதிமன்றம் கருத்து!

Published by
Rebekal

கணவனை கொன்ற கொலையாளியாக இருந்தாலும் கூட மனைவி குடும்ப ஓய்வூதியத்தினை பெறுவதற்கு தகுதியானவர் தான் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2008 ஆம் ஆண்டிலுள்ள ஒரு கொலை வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் கணவனை கொலை செய்த குற்றவாளியாக இருந்தாலும் கூட அந்த பெண் குடும்ப ஓய்வூதியத்தை பெறுவதற்கு தகுதியானவர் தான் என பரபரப்பான கருத்துக்களை கூறியுள்ளது. குடும்ப ஓய்வூதியம் என்பது அரசு ஊழியர் ஒருவர் இறந்துவிட்டால் வழங்கப்படக்கூடிய ஒரு நிதி உதவி.

இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள தர்செம் சிங் என்பவர் 2008 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட நிலையில், அதற்கான குற்றவாளி அவரது மனைவி தான் என 2011 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு வரை குடும்ப ஓய்வூதியத்தை பெற்று வந்த கொலை செய்யப்பட்ட தர்செம் சிங்கின் மனைவி பால்ஜீத் கவுருக்கு, திடீரென ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஹரியானா அரசாங்கத்தின் மீது போடப்பட்ட வழக்கு குறித்த விசாரணையில்,  குற்றவாளியாக இருந்தாலும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படலாம் என தற்பொழுது உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை அடுத்து கொடுக்கப்படாமல் நிலுவையில் இருந்த தொகையையும், இனி உள்ள ஓய்வூதியத்தையும் முறையாக வழங்க வேண்டும் என இது சம்மந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

நாளை சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் கணிப்பு!

நாளை சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் கணிப்பு!

சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (27ம் தேதி) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில்…

9 minutes ago

ரோஹித் சர்மாவுக்கு என்னாச்சி.? நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது இந்திய…

2 hours ago

யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? சும்மா வதந்தி பரப்பாதீங்க..விளக்கம் கொடுத்த மகன்!

சென்னை : பிரபல பின்னணி பாடகரான கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற…

2 hours ago

லோகேஷ் படத்தில் ஐட்டம் பாடல்! பூஜா ஹெக்டே வைத்து சன் பிக்சர்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்!

சென்னை : ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு…

3 hours ago

இந்தியால் அழிந்த இந்திய மொழிகள்., தமிழ் விழித்தது, பிழைத்தது! – மு.க.ஸ்டாலின் பதிவு!

சென்னை : தமிழ்நாடு தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என்ற நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும், தேசிய கல்வி…

3 hours ago

விரைவில் அமலாகும் வக்பு வாரிய திருத்த மசோதா? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி : வக்பு வாரியம் என்பது இஸ்லாமிய மக்களால் தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்கும் ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆகும்.…

4 hours ago