ஏர் கூலரை பயன்படுத்துவதற்காக கொரோனா நோயாளிக்கு வென்டிலேட்டரை கழற்றி விட்ட குடும்பத்தினர்.
கோட்டா மருத்துவமனையில், மகாராவ் பீம் சிங் என்பவர், கடந்த ஜூன் 13ம் தேதி கொரோனா பாதிப்பால் ஐ.சி.யு – வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், கொரோனா பாதிப்பு இல்லை என சோதனை முடிவுகள் வந்தது. மேலும் அங்கு இன்னொருவருக்கு ககொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு சோதனை முடிவுகள் பாசிடிவ் என வந்துள்ளது.
இதனையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையாக மகாராவ் பீம் சிங் ஐ.சி.யு – வில் இருந்து, தனிப்படுத்தப்பட்ட வார்டுக்கு மாற்றப்பட்டார். அந்த வார்டு மிகவும் சூடாக இருந்ததால், அவரது குடும்பத்தினர் அன்றே ஒரு ஏர் கூலரை வாங்கியுள்ளனர்.
இதனையடுத்து, ஏர் கூலரை சொருகுவதற்கு எந்த சாக்கெட்டும் கிடைக்காததால், அவருக்கு மாட்டப்பட்டிருந்த வெண்டிலெட்டரை அவிழ்த்து விட்டுள்ளனர். ஆனால், அந்த வெண்டிலேட்டர் மின்சாரம் இல்லாமலேயே அரைமணி நேரம் ஓடியுள்ளது. ஆனால், நோயாளி சற்று நேரத்தில் இறந்துவிட்டார்.
இதனையடுத்து, துணை கண்காணிப்பாளர், நர்சிங் கண்காணிப்பாளர் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரி அடங்கிய குழு இந்த சம்பவம் குறித்து விசாரித்து சனிக்கிழமை அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் நவீன் சக்சேனா தெரிவித்துள்ளார்.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…