மகாராஷ்டிரா மாநிலத்தில் தக்காளியின் விலை 2 ரூபாயாக குறைந்துள்ளதால், விவசாயிகள் தக்காளிகளை வீதிகளில் கொட்டி சென்றுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் எனும் நகரில் காய்கறி விற்பனை செய்யும் மொத்த சந்தையில் தக்காளியின் விலை நேற்று இரண்டு ரூபாய் முதல் மூன்று ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. தக்காளியின் விலை மிக அதிக அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதுடன் பருவகால மழையும் தொடங்கியுள்ளதால் தக்காளிகளை சேகரித்து வைத்து பாதுகாக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, தக்காளி பயிர் செய்த நாசிக் நகர் விவசாயிகள் அவற்றைக் கூடைகளுடன் சாலைகளில் குவியலாக கொட்டி உள்ளனர். இந்த தக்காளிகளை விற்பனை செய்தாலும் வண்டி வாடகை மற்றும் ஆள் கூலிக்கு கூட இது போதாது என விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். தற்போது இது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
சென்னை : மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக ஆளும் திமுக அரசு…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…