இந்திய எல்லைகளை கண்காணிக்க இஸ்ரேலிடம் இருந்து அதிநவீன பால்கன் விமானங்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திய பாதுகாப்பு படையை பலப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே ரஃபேல் விமானங்கள், அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவத்திற்காக மத்திய அரசு வாங்கியுள்ளது. இதனால் இந்திய விமானப் படையின் பலம் அதிகரித்துள்ளது.
தற்போது, வான்வெளி கண்காணிப்பு திறனை அதிகரிக்க இஸ்ரேல் நாட்டில் இருந்து பால்கன் ரக விமானங்களை இந்தியா வாங்க உள்ளது.
இஸ்ரேல் தயாரிப்பில் உருவாகும் பால்கன் விமானமானது சுமார் 7000 கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள எதிர் நாட்டு விமானங்களை கூட துல்லியமாக அடையாளம் கண்டு நமக்கு எச்சரிக்கை தரும் திறன் கொண்டது. இந்த விமானமானது மணிக்கு 973 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.
பால்கான் ரக விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டாலும், இஸ்ரேலிடம் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஆதலால் இஸ்ரேல் நாட்டிலிருந்து இரண்டு விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் வழங்கவுள்ளதாம் .
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…