போலி ஐபிஎல்… ஹைடெக் சூதாட்டம்… ரஷ்ய கும்பலிடம் பணத்தை சுருட்டிய இந்திய கும்பல்…

Default Image

ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் போது சில சட்டவிரோத கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டதை செய்திகள் வாயிலாக கேள்வி பட்டிருப்போம். ஆனால் குராஜத்தை சேர்ந்த ஒரு கும்பல் இங்கு போலி ஐபிஎல் போட்டியையே நடத்தி ரஷ்ய நாட்டை சேர்ந்த கும்பலை ஏமாற்றியுள்ளனர்.

குஜராத்தை சேர்ந்த அந்த கும்பல், சென்னை, குஜராத் அணிகளின் ஜெர்சியை அணிந்து கொண்டு ஒரு குரூப் மேட்ச் ஆகியுள்ளது. அதற்கு தனி மைதானம் அமைத்து, ஹைடெக் கேமிரா அதற்கான கேமிராமேன், என பக்கா பிளான் போட்டுள்ளது அந்த கும்பல்,

ரஷ்யாவில் உள்ள ஒரு சூதாட்ட கும்பலிடம் டெலிகிராம் மூலம் பேசி இங்கு ஐபிஎல் போட்டி நடப்பது போல காட்டியுள்ளது. அதன்படி அவர்களும் பணத்தை கட்டியதாக தெரிகிறது. இங்குள்ள கிராமத்து ஆட்களை தினம் 400 ரூபாய் கூலி என பேசி விளையாட வைத்துள்ளனர்.

இதன் மூலம் லட்சக்கணக்கில் பணமோசடி நடந்துள்ளாதாக கூறப்படுகிறது. இந்த போலி ஐபிஎல் போட்டி நடத்தியதாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனராம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்