டெலிகிராமில் 5000 ரூபாய்க்கு விற்கப்படும் போலி கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள்….!

Published by
Rebekal

டெலிகிராமில் இந்தியாவுக்கான போலி கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் 5000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸுக்கு எதிராக பல்வேறு நாடுகளிலும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு செலுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில், கொரோனா பரவலை தவிர்க்கும் விதமாக வெளி நாடுகளில் இருந்து வரக்கூடிய மக்களுக்கு, கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனும் கட்டுப்பாடுகள் பல நாடுகளில் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெளி நாடுகளுக்கு கட்டாயமாக செல்ல வேண்டும் என விரும்புபவர்கள் பலர் தடுப்பூசியை செலுத்தி கொள்கின்றனர். ஆனால்,சிலர் தடுப்பூசி செலுத்தி கொள்ள அச்சத்தில் போலியாக கொரோனா தடுப்பூசி சான்றிதழை பணத்திற்கு வாங்கி காண்பித்து செல்கின்றனர். தற்பொழுதும், இந்தியா உட்பட 29 நாடுகளின் போலியான கொரானா தடுப்பூசி சான்றிதழ் மற்றும் போலியான கொரோனா சோதனை முடிவுகள் டெலிகிராமில் விற்பனை செய்யப்படுவதாக செக் பாயிண்ட் ரிசர்ச் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் போலி தடுப்பூசி சான்றிதழ் ஒவ்வொன்றும் 5,520 ரூபாயில் கிடைப்பதாகவும், தடுப்பூசி எடுக்க விரும்பாத நபர்கள் பலர் இவ்வாறு போலியான கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களை வாங்குகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மார்ச் முதல் 5,000-க்கும் மேற்பட்ட போலியான டெலிகிராம் குழுக்கள் இது போன்ற போலி தடுப்பூசி சான்றிதழ்களை விற்பனை செய்தது கண்டறியப்பட்டுள்ளதாகவும், டெலிகிராமில் தான் இந்த போலி சான்றிதழ் விற்பனை அதிகளவில் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

3 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

3 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

4 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

4 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

4 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

5 hours ago