கொரோனா பரிசோதனைக்கான மாதிரி சேகரிக்கப்படும் போது, பலர் தங்களது முகவரி, மொபைல் நம்பரை மாற்றி தவறாக கொடுத்துவிட்டதால், தற்போது கொரோனா உறுதிசெய்யப்பட்ட சுமார் 3300 பேரை கண்டுபிடிக்கமுடியவில்லை என பெங்களூரு காவல்துறை அதிகாரி மஞ்சுநாத் பிரசாத் கூறியுள்ளார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் அங்கு கொரோனா சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு கடந்த 14 நாட்களில் 16 ஆயிரமாக இருந்த கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 27 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், பெங்களூரு நகரில் வசிக்கும் மக்களிடம் கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அதன் முடிவுகளும் வெளியாகிவிட்டன. ஆனால், அதில் கொரோனா உறுதிசெய்யப்பட்ட 3,338 பேரை கண்டுபிடிக்கமுடியவில்லை. என காவல்துறை உயர்அதிகாரி மஞ்சுநாத் பிரசாத் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.
மாதிரி சேகரிக்கப்படும் போது, பலர் தங்களது முகவரி, மொபைல் நம்பரை மாற்றி தவறாக கொடுத்துவிட்டனர். அதனால், தற்போது கொரோனா உறுதிசெய்யப்பட்ட சுமார் 3300 பேரை கண்டுபிடிக்கமுடியவில்லை என காவல்துறை அதிகாரி மஞ்சுநாத் பிரசாத் கூறியுள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…