வன்முறையை தூண்டும் நோக்கில் கருத்துக்கள் பதிவேற்றினாலோ, அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ராகுல் காந்தியின் குற்றச்சாற்றுக்கு பேஸ்புக் நிறுவனம் பதிலளித்துள்ளது.
பாஜக அரசு, இந்தியாவில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமுக வலைத்தளங்களை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி நேற்று குற்றம்சாட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர், பாஜக கட்சியும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பிரபல சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பை கட்டுப்படுத்தி வருகின்றதாகவும், அதன் மூலம் போலி செய்திகளையும், வெறுப்புகளையும் வாக்காளர்களிடையே பரப்பி வருகின்றதாக தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, இதுதொடர்பான உண்மையை அமெரிக்க ஊடகங்கள் செய்தி வாயிலாக வெளிப்படுத்தியுள்ளது எனவும் குற்றசம் சாட்டினார். ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாற்றுக்கு பேஸ்புக் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், வெறுப்புப் பேச்சுகள் யாரிடம் இருந்து வந்தாலும், அதனை பேஸ்புக் ஏற்பதில்லை என விளக்கமளித்துள்ளது.
பாஜக உறுப்பினர்களுக்கும், பேஸ்புக் நிறுவனத்துக்கும், எந்தொரு தொடர்பும் இல்லையெனவும், உலகளவில் சர்ச்சைக்குரிய வெறுப்புப் பேச்சுகள் பதிவேற்றம் செய்யப்பட்டாலோ, வன்முறையை தூண்டும் நோக்கில் கருத்துக்கள் பதிவேற்றினாலோ, அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பேஸ்புக் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…