டெல்லி: சில மணிநேரங்களுக்கு முன்னர் பாஜக எம்.பியும் நடிகையுமான கங்கானா ரனாவத் சண்டிகர் விமான நிலையத்திற்கு வந்த போது அங்கு பெண் CSIF ஊழியர் ஒருவர், கங்கானாவை கன்னத்தில் அறைந்துவிட்டார். இது தொடர்பான வீடியோ வெளியாகி இருந்த சூழலில், இதுகுறித்து டெல்லி வந்த பிறகு, கங்கானா வீடியோ வெளியிட்டுள்ளார்
அதில் அவர் பேசுகையில், ஊடகங்கள் மற்றும் எனது நலம் விரும்பிகளிடமிருந்து எனக்கு நிறைய தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. நான் தற்போது பாதுகாப்பாக இருக்கிறேன். நான் நன்றாக இருக்கிறேன்.
சண்டிகர் விமான நிலையத்தில் இன்று நடந்த சம்பவம் என்னவென்றால், செக்யூரிட்டி சோதனை முடிந்து நான் வெளியே வந்தவுடன், இரண்டாவது கேபினில் இருந்த பெண் சிஐஎஸ்எஃப் செக்யூரிட்டி ஊழியர், என் முகத்தில் அடித்தார்கள், அவர் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக கூறினார்.
நான் பாதுகாப்பாக தான் இருக்கிறேன். ஆனால், பஞ்சாபில் தீவிரவாதம் அதிகரித்து விட்டது. அது குறித்து கவலை கொள்கிறேன் என வீடியோவில் கங்கனா தெரிவித்தார்.
சென்னை : கடந்த சில நாள்களாக தங்கம் விலை உயர்ந்து, நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது. ஆனால்,…
துபாய் :2024 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 4-வது போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்,…
சென்னை : 92வது இந்திய விமானப்படைத் தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் நாளை விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.…
லெபனான் : இஸ்ரேல், பாலஸ்தீன காசா நகர் மீது கடந்த ஒரு வருடமாக தாக்குதல் நடத்தி வருகிறது. சரியாக சொன்னால்…
சென்னை : 92வது இந்திய விமானப்படைத் தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நாளை நடைபெற…
ஹரியானா : ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டு , காஷ்மீரில் 3 கட்டங்களாக…