தீவிரவாத செயல்களை நிறுத்தும்வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை இல்லை…!வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்
பாகிஸ்தானில் நடைபெறும் சார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில்,தீவிரவாத செயல்களை நிறுத்தும்வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை இல்லை.பாகிஸ்தானில் நடைபெறும் சார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சரை அடுத்து தற்போது அந்நாட்டு ராணுவ தளபதி இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.