கொரோனாவின் தீவிரத்தை மேலும் கட்டுப்படுத்தும் விதமாக வருகிற 23-ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள மக்களை பாதுகாப்பதற்காகவும், நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்கும் கடந்த சில நாட்களாக முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இந்நிலையில், கேரளாவில் கொரோனாவின் தாக்கம் அதிகம் உள்ளதால் கடந்த 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரையிலும் முழு ஊரடங்கு அம்மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டது.
ஏற்கனவே முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் கேரளாவில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாததால் தற்போது மீண்டும் வருகிற 23-ஆம் தேதி வரையிலும் இந்த முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கொரோனாவின் தீவிரம் கட்டுக்குள் வராத பகுதிகள் மற்றும் நோயாளிகள் அதிகமாக இருக்கக்கூடிய பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் தேவைப்படுவதாகவும், எனவே கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நாளை, அதாவது 16 ஆம் தேதி அன்று முதல் மூன்று மடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…
டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது…