மேலும் 3 மாதங்களுக்கு மெகபூபா முப்திக்கு நீடிக்கப்பட்ட வீட்டுக்காவல்!

Published by
Rebekal

ஜம்மு-காஷ்மீரின் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தியின் வீட்டு காவலை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க காஷ்மீர் நிர்வாகம் உத்தரவு.

கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு உண்டான அதிகாரம் வழங்கும் 370 ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்கள் ஆக பிரித்து மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியது தினமே ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் அவரது மகன் உமர் அப்துல்லா ஆகிய நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா ஆகிய மூவர் மட்டும் பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

பொது பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள இவர்களை விசாரணையின்றி ஓராண்டு வரையும் காவலில் வைத்திருக்க முடியும். கடந்த வருட ஆகஸ்ட் மாதம் முதல் வீட்டுக் காவலில் இருந்த உமர் அப்துல்லா மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோர் இந்த வருடம் மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தியை அரசு விடுவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது மட்டுமல்லாமல் வருகிற ஆகஸ்ட் 5-ம் தேதியுடன் அவரது வீட்டு காவலும் முடிவடைய இருப்பதால் மேலும் மூன்று மாதங்களுக்கு வீட்டு காவலில் வைக்க  ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

CSK மேட்சுக்கு AK பேமிலி விசிட்! வைரலாகும் அஜித்குமார் வீடியோஸ்!

CSK மேட்சுக்கு AK பேமிலி விசிட்! வைரலாகும் அஜித்குமார் வீடியோஸ்!

சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…

15 minutes ago

CSK vs SRH : சென்னை படுதோல்வி..! CSK பிளே ஆப் கனவை தகர்த்த ஹைதராபாத்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…

27 minutes ago

“காஷ்மீர் குற்றவாளிகள் கனவில் கூட நினைக்காத தண்டனை தர வேண்டும்” ரஜினிகாந்த் ஆவேசம்!

சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

1 hour ago

CSK vs SRH : பந்துவீச்சில் மிரட்டிய ஹைதராபாத்! தடுமாறிய சென்னை ‘ஆல் அவுட்’! 155 டார்கெட்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…

2 hours ago

அரைக்கம்பத்தில் தேசியக்கொடி! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது! – தமிழக அரசு.

சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ்  கடந்த…

4 hours ago

CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…

5 hours ago