கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ரெயில் மற்றும் விமான உள்பட அனைத்து போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. இதனால் வேலை, கல்வி உள்ளிட்ட காரணங்களுக்காக வேறு மாநிலங்களுக்கு சென்றவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்தவர் கிருஷ்ணா. இவர் மகாராஷ்டிரா மாநிலம் சப்-அர்பன் கன்டிவாலி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக வேலை செய்து வந்துள்ளார். இவர் மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக தனது சொந்த ஊருக்கு செல்லமுடியாமல் மிகவும் மன உளைச்சலால் இருந்த நிலையில், ஏப்ரல் 14-ம் தேதி ஊரடங்கு முடிவுக்கு வந்த உடன் தனது ஊருக்கு சென்று விடலாம் என எண்ணி காத்திருந்தார்.
ஆனால், ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, மீண்டும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான கிருஷ்ணா தான் தங்கி இருந்த வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…