என்னை மன்னியுங்கள் அப்பா!நான் நல்ல பொண்ணு இல்ல என்று கடிதம் எழுதிவிட்டு தந்தையை கொன்ற மகள்!

Published by
Sulai
  • ரெபெல்லோ என்பவர் ஆராதியா பாட்டில் என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்துள்ளார்.
  • தனது காதலனுடன் சேர்ந்து ஆராதியா தந்தை ரெபெல்லோ தலையில் அடித்த கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் வசித்து வந்தவர் ரெபெல்லோ ஆவார்.இவர் ஒரு இசை கலைஞராகவும் இருந்துள்ளார்.இந்நிலையில் இவர் சில வருடங்களுக்கு முன்பு வீதியில் அனாதையாய் சுற்றித்திரிந்த ஆராதியா பாட்டில் என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்துள்ளார்.

அந்த பெண்ணுக்கு அப்பகுதியில் வசிக்கும் பதினாறு வயது சிறுவனுடன் நட்பு ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.இதன் அடிப்படையில் ஆராதியா தந்தைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அப்பா என்னை மன்னியுங்கள் கடவுளே என்னை மன்னியுங்கள் நான் மிகவும் மோசமான பெண் என ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.பின்னர் தனது காதலனுடன் சேர்ந்து தந்தையை தலையில் அடித்த அவர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

பின்னர் ரெபெல்லோ இறந்ததை உறுதி செய்த அவர்கள் சடலத்தை மூன்று நாட்களாக வீட்டு கழிவறையில் வைத்து வந்துள்ளனர்.இந்த நேரத்தில் சடலத்தின் கால்களை ஸ்டவ் மீது வைத்து எரித்துள்ளனர்.

பின்னர் உடலின் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து மும்பையில் உள்ள மிதி ஆற்றின் கரையில் வீசி சென்றுள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் சூட்கேசில் இருந்த உடல் பாகங்களில் ரெபெல்லோ அணிந்திருந்த சட்டையில் அப்பகுதியில் உள்ள டெய்லர் கடையின் அடையாளம் இருந்ததை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் பிறகு குற்றவாளிகளை கண்டறிந்த காவல் துறையினர் ஆராதியா பாட்டிலையும் அவரது காதலனையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.மேலும் விசாரணையில் தந்தை பல முறை பாலியல் தொந்தரவு கொடுத்ததால் கொலை செய்ததாக ஆராதியா கூறியுள்ளார்.

Published by
Sulai

Recent Posts

சிஎஸ்கே தொடர் தோல்வி…விமர்சனங்கள் குறித்து மௌனம் கலைத்த அஸ்வின்!

சிஎஸ்கே தொடர் தோல்வி…விமர்சனங்கள் குறித்து மௌனம் கலைத்த அஸ்வின்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…

24 minutes ago

அமித்ஷா வருகை., “அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.,” அண்ணாமலை பேட்டி!

சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…

1 hour ago

கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!

சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…

1 hour ago

அண்ணாமலைக்கு வாய்ப்பு இல்லை? புதிய பாஜக மாநிலத் தலைவர் தேர்தல் அறிவிப்பு இதோ…

சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…

1 hour ago

இந்த அஜித்தை தான் நாங்க எதிர்பார்த்தோம்! குட் பேட் அக்லியை கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!

சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் படம் தாறுமாறாக இருப்பதாக தங்களுடைய…

2 hours ago

அதிமுக நிலைப்பாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…

4 hours ago