நாட்டின் தலைநகரான டெல்லியின் சுபாஷ் நகர் பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சுபாஷ் பிளேஸ் போக்குவரத்து சந்திப்பில் இரண்டு பேர் காரில் சென்று கொண்டிருந்தபோது,நேற்று மாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவர்களின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதனால், காரை முன்னோக்கியும் பின்னோக்கியும் அவர்கள் இயக்கிய நிலையில்,மர்ம நபர்கள் அவர்களை துரத்தி சென்று சுட்டனர்.
இதனால்,படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர். இதனையடுத்து,துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அனைத்து கோணங்களிலும் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் குழுக்கள் அமைக்கப்பட்டு தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…