பரபரப்பு : மருமகளை சுட்டு கொன்ற மாமனார்..! நடந்தது என்ன..?

மகாராஷ்டிராவில் காலை உணவு தர தாமதமானதால், ஆத்திரத்தில் மருமகளை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மாமனார்.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் சீமா ராஜேந்திரா(42) என்ற பெண்மணி தனது காலை உணவை தயாரித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது தொழிலதிபரான காசிநாத் பாட்டில் என்பவர் தனக்கு காலை உணவு தருவதற்கு தாமதமானதால் கோபமடைந்து அவர் தான் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால் மருமகளை சுட்டுள்ளார்.
இந்த சம்பவம் நடந்த போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் இருந்த நிலையில் அந்த பெண்ணை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக அறிவித்துள்ளனர். மருமகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு காசிநாத் தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025