#Breaking : 7 மாதங்களுக்கு பிறகு பரூக் அப்துல்லா வீட்டுக் காவலில் இருந்து விடுவிப்பு

Default Image

பரூக் அப்துல்லா வீட்டுக்க்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இதில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இவரை விடுவிக்க கோரி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.  

இந்நிலையில் பரூக் அப்துல்லா வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு மேலாக வீட்டுக்காவிலில் இருந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்