தடுப்பூசி எடுத்து கொண்டவர்களும் இனிமேல் மகாராஷ்டிரா மாநிலத்திற்கும் நுழைய ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் தற்பொழுது கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வந்தாலும், அடுத்த கட்டமாக கொரோனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பல்வேறு மாநிலங்களிலும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போதும் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 4 ,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 170 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இனிமேல் மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் வரக்கூடிய ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகள் அனைவருக்குமே ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றிதழ் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முழுமையாக கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களும் கூட இந்தப் பரிசோதனை சான்றிதழ் இருந்தால் மட்டுமே மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் அனுமதிக்கப் படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…