திரிபுராவின் ஒவ்வொரு குடும்பமும் பாஜகவின் கொள்கைகளின் பலன்களைப் பெற்றுள்ளது என பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்-16 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்தின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, பாஜகவினால் பலன்களைப்பெறாத குடும்பமே திரிபுராவில் இல்லை என்றும், மக்களுக்கு பாஜக எப்போதும் சேவை புரிவதில் தயாராக இருக்கும் என்றும் கூறினார். மேலும் திரிபுரா மாநிலத்திற்கு முன்னேற்றம் கொண்டுவருவதில் அனைத்து வாய்ப்புகளையும் பாஜக பயன்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.
நாங்கள் பழிவாங்கும் அரசியலை விட மாற்றத்திற்கான அரசியலில் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார். பாஜக ஆட்சியில் மக்களுக்கு இலவச ரேஷன், மருத்துவ உதவி, வீடுகள் மற்றும் பிற வசதிகள் கிடைத்தன என்று மோடி கூறினார். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இன்னும் வீடுகள் கிடைக்காத அனைவருக்கும், மாநிலத்தில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு வீடுகள் வழங்கப்படும் என்பதை நான் உறுதியளிக்க விரும்புகிறேன், என்று அவர் மேலும் கூறினார்.
சென்னை : மணிமேகலை விஷயத்தில் பிரியங்காவுக்கு எதிராக அவருடைய குணத்தை மட்டம் தட்டும் அளவுக்கு விமர்சனங்கள் எழுந்தது என்றே கூறலாம்.…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை…
கான்பூர் : கடந்த செப்.19 தேதி முதல் 4 நாட்களாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில்…
சென்னை : நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் செப்டம்பர்…
சென்னை : தமிழகத்தில் சட்டவிரோத குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் சமீப காலமாக தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு…
சென்னை : திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் மோகன் ஜி அடிக்கடி தனக்குத்…