நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 20-ஆம் தேதி தொடங்கிய நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக தொடர் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டு வந்த நிலையில், 8 நாட்களாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் திமுக எம்பி திருச்சி சிவா அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியதற்கு, ஆளும் கட்சிதான் காரணம். சபாநாயகர் பேச அனுமதி அளித்தாலும் ஆளுங்கட்சி எம்பிக்கள் பேச விடுவதில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசிய போது மைக்கை அணைத்து இடையூறு செய்தனர். எதிர்கட்சி தலைவர் பேச எழுந்தாலே அவரை பேச விடாமல் அமளியில் ஈடுபடுகின்றனர். நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு பிரதமரோ, ஆளும் அரசோ மரியாதை தருவதில்லை.
பிரதமர் அவைக்கு வந்து பதில் தர வேண்டுமென கேட்பது நியாயமான கோரிக்கை. மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என பிடிவாதம் பிடிக்கவில்லை; உறுதியாக இருக்கிறோம். மணிப்பூர் குறித்த விவாதத்துக்கு பிரதமர் வந்து பதிலளிக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…
தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…