அவங்க அப்பா வந்தாலும் கைது செய்ய முடியாது- ராம்தேவ்..!

Default Image

ராம்தேவை யாராலும் கைது செய்ய முடியாது. உன்னால் மட்டும் அல்ல, உங்க அப்பா வந்தால் கூட கைது செய்ய முடியாது என பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

பதஞ்சலி நிறுவனத்தை நடத்திவரும் பாபா ராம்தேவ்,சமீபத்தில் நவீன மருத்துவ முறைகளை (அலோபதி) முட்டாள்தனமான அறிவியல் என்றும், கொரோனா சிகிச்சை முறையில் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தவர்களைவிட, அலோபதி மருந்துகளால்தான் அதிகம் பேர் இறந்தனர் எனக் கூறினார். ராம்தேவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

பாபாராம்தேவ் கூறிய கருத்து பலர் கண்டனம் தெரிவித்தனர். பின்னர், ராம்தேவ் சார்பில் ஒரு அறிக்கை ஓன்று வெளியிடப்பட்டது. அதில் தனது  கருத்தை திரும்பப் பெறுவதாகவும், மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து, இந்திய மருத்துவர் சங்கத்தின் உத்தரகாண்ட் மாநில கிளை “நவீன மருத்துவத்தை தவறாகப் பேசிய பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் 15 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இல்லாவிட்டால் ரூ.1000 கோடி இழப்பீடு தரவேண்டும் என நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கிடையில், இந்திய மருத்துவர் சங்கம் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அதில் ராம்தேவ், கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பொய்யான பிரசாரம் செய்கிறார். அதனால் அவர் மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இந்நிலையில், ராம்தேவின் பேசுவது போன்ற வீடியோ ஓன்று வெளியாகியுள்ளது. அதில், ராம்தேவை யாராலும் கைது செய்ய முடியாது. உன்னால் மட்டும் அல்ல, உங்க அப்பா வந்தால் கூட கைது செய்ய முடியாது என பேசுவது போன்று இடம்பெற்றுள்ளது. இந்த சர்ச்சைவீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்