மும்பை: “என் காதலியை பார்க்க போகணும்னா?வாகனத்தில் என்ன கலர் ஸ்டிக்கர் ஓட்டனும்” என்று போலீசிடம் கேட்ட இளைஞர்…!

Published by
Edison

மும்பையில் ஊரடங்கு நேரத்திலும், காதலியை சந்திக்க விரும்பும் ஒரு நபருக்கு மும்பை காவல்துறை சரியான பதிலைக் கொடுத்துள்ளது.

மும்பையில்,கொரோனா பரவல் காரணமாக வார இறுதி நாட்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,ஊரடங்கின் போது சிவப்பு,பச்சை,மஞ்சள் ஆகிய வண்ண குறியீடுகளைக் கொண்ட வாகனங்கள் மட்டுமே சாலையில் அனுமதிக்கப்படும் என்றும்,இந்த 3 வண்ணக் குறியீடுகள் உள்ள வாகனங்கள் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும்,மும்பை காவல்துறை இந்த கடுமையான முடிவை அறிவித்துள்ளது.

மேலும்,ஏதேனும் சந்தேகம் இருந்தால் மும்பை மாநகர காவல் துறையின் ட்விட்டர் பக்கத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.காவல் துறையின் இந்த அறிவிப்பால்,மும்பை மாநகர ட்விட்டர் இன்பாக்ஸ் ஆனது SOS செய்திகளால் நிரம்பியுள்ளது

இருப்பினும் மும்பை காவல்துறையானது,ட்விட்டரில் சந்தேகம் கேட்பவர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க, தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது.

இந்த நிலையில்,மும்பையில் வசிக்கும் அஸ்வின் வினோத் என்பவர் ஒரு வித்தியாசமான கேள்வியை கேட்டுள்ளார்.அதாவது,”ஊரடங்கு நேரத்தில் என் காதலியைச் சந்திக்க வெளியே செல்லும் போது வாகனத்தில் ஸ்டிக்கரின் எந்த நிறத்தைப் பயன்படுத்த வேண்டும்”,என்று மும்பை மாநகர காவல் துறையின் ட்விட்டர் பக்கத்தில் கேட்டுள்ளார்.

இதற்கு,மும்பை காவல்துறை மிகுந்த மரியாதையுடன் கூறியதாவது, “உங்கள் காதலியை நேரில் சந்திக்க ஆசைபடுவது உங்களுக்கு இன்றியமையாதது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்,ஆனால், துரதிர்ஷ்டவசமாக இது எங்கள் அத்தியாவசிய அல்லது அவசர சூழ்நிலைகளின் கீழ் வராது.மேலும்,தூரம் தான் காதலை வளர்க்கும்.அதனால் தற்போது,நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்,நீங்கள் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருக்க வாழ்த்துகிறோம்”என்று கூறிப் பதிலளித்துள்ளது.

இதன்மூலம்,கொரோனா ஊரடங்கு உத்தரவின் போது காதலியை சந்திக்க விரும்புவது ஒரு அத்தியாவசியமற்ற நடவடிக்கை என்பதை,மும்பை காவல்துறை அஸ்வினுக்கு தெளிவுபடுத்தியுள்ளது.

Published by
Edison

Recent Posts

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

1 hour ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

2 hours ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

3 hours ago