கேரளா வாக்குச்சாவடியில் பணியில் ஈடுபட்ட ரோபோ. வாக்காளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்வதோடு, கொரோனா விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுத்துகிறது.
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகின்ற நிலையில், இந்தத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்று வருகிற நிலையில், நேற்று இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. திரிககர சமுதாய மண்டப வாக்கு சாவடியில் ரோபோ ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ரோபோ வாக்குச்சாவடிகளில் வாயிலில் சிரித்த முகத்துடன், வாக்காளர்களை வரவேற்று, கை கழுவும் திரவத்தை வழங்கி, முகக்கவசத்தை சரியாக அணியுமாறு அறிவுறுத்துகிறது. பின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்து, வெப்பநிலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் வாக்குச்சாவடி அதிகாரியை தொடர்பு கொள்ளுமாறு கூறுகிறது. வாக்குச்சாவடிக்கு முன்பாக கூட்டமாக இருக்கும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு வாக்காளர்களுக்கு அறிவுறுத்துகிறது.
ரோபோவை பணியில் ஈடுபடுத்தியதால், வாக்காளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒரு வாக்குச் சாவடியில், ரோபோ பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. இது ஒரு பெரிய சாதனை என்றும், ரோபோவை உருவாக்கிய அசிமோவ் ரோட்டோடிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டி.ஜெயகிருஷ்ணன் அவர்கள் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…