இன்ஜினியர் தினம் – சிறந்த தேச பொறியாளர் எம் விஸ்வேஸ்வரயாவுக்கு மரியாதை!

Published by
Rebekal

இன்று இன்ஜினியர்கள் தினத்தை ஒட்டி, தேசத்தின் சிறந்த பொறியாளராகிய எம்.விஸ்வேஸ்வரயா நினைவுகூரப்படுகிறார்.

நாம் ஒவ்வொருவருமே தற்போதைய நவீன காலகட்டத்தில் பயன்படுத்தக்கூடிய சாதாரண செல்போன் முதல் பெரிய வீட்டு உபயோகப் பொருட்கள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் ஆகிய அனைத்திலுமே ஏதோ ஒரு பொறியாளரின் கலை அமைந்துள்ளது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. நம்முடைய வாழ்க்கையில் கட்டிடம் கட்டுவதற்கு கூட நாம் பொறியாளர்களை தான் எதிர்பார்க்கிறோம். இந்நிலையில் இந்தியாவின் புகழ்பெற்ற பொறியாளரான விஸ்வேஸ்வரய்யா என்பவரின் பிறந்த தினமான இன்று இந்தியா முழுவதிலும் பொறியாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இவர் சிறந்த பொறியாளருக்கான பாரத ரத்னா விருதை 1955 ஆம் ஆண்டு பெற்றுள்ளார். இவரை நினைவு கூறும் விதமாக இன்று இந்தியா முழுவதிலும் பொறியாளர் தினம் கொண்டாடப்படுகிறது.
கர்நாடகாவில் உள்ள முட்டேனஹல்லி எனும் சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த இவர் பொறியியல் துறையில் மிகவும் சிறந்து விளங்கியுள்ளார். சமஸ்கிருத அறிஞர்களாகிய பெற்றோர்களுக்கு மகனாகப் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை கர்நாடகாவில் கற்ற பிறகு உயர்கல்விக்காக பெங்களூர் சென்று அங்கு இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.  அதன் பின் புனே பொறியியல் கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் பட்டம் பெற்றுள்ளார். இவரது நினைவாக புகழ் பெற்ற இந்தியாவின் 5 வது பொறியியல் கல்லூரி ஒன்றுக்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடினமாக உழைத்து படித்த இவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் நிர்வாக குழுவில் உறுப்பினராகவும் இருந்துள்ளார். 15 செப்டம்பர், 1860 இல் பிறந்த இவர், 12 ஏப்ரல், 1962 இல் உயிரிழந்துள்ளார்.
Published by
Rebekal

Recent Posts

17 சுரங்கபாதைகள்., நெருங்கிய பாதுகாப்பு படை! பாக். ரயில் கடத்தலின் தற்போதைய நிலை…

17 சுரங்கபாதைகள்., நெருங்கிய பாதுகாப்பு படை! பாக். ரயில் கடத்தலின் தற்போதைய நிலை…

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…

2 hours ago

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு எப்போது? என்னென்ன பாதுகாப்பு வசதிகள்?

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…

4 hours ago

வெறிநாய் கடியால் பறிபோன உயிர்? கோவையில் தற்கொலை செய்துகொண்ட வடமாநில தொழிலாளி!

கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…

5 hours ago

எக்ஸ் சைபர் அட்டாக் : “செஞ்சது இவங்க தான்?” உக்ரைனை சுட்டி காட்டிய மஸ்க்!

சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…

5 hours ago

400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரயில் ஹைஜேக்… பாகிஸ்தானில் உச்சக்கட்ட பதற்றம்.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா - பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது.…

6 hours ago

அடுத்த 2 மணி நேரத்திற்கு 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்.!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

7 hours ago