சமூக வலைதளங்களை பொறுத்தமட்டில் இந்தியாவில் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் ஆதிக்கம் செலுத்தி வருகிறது .ஆனால் இது சிறிது நாட்களாகவே அதிக சர்ச்சைகளில் சிக்கி வருகிறது .பேஸ்புக் தங்கள் பயனர்களை உளவு பார்ப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது இது ஒருபுறம்இருக்க ட்விட்டர் தனது பயனர்களுக்கு பாகுபாடு காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது .இதனால் சமூக வலைதளவாசிகள் “Mastodon” என்ற சமூகவலைத்தள் பக்கம் நோக்கி திரும்ப ஆரம்பித்துள்ளனர்.
ட்விட்டர் ,பேஸ்புக்கில் அதிகாரப்பூர்வ பக்கம் மற்றும் பிரபலமானவர்களுக்கு புளூ டிக் கொடுக்கப்படும் .இந்த புளூ டிக் கொடுப்பதில் ட்விட்டர் நிறுவனம் பாகுபாடு காட்டுவதாகவும் அவர்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்களை தவிர மற்றவர்களின் கணக்குகள் சரிபார்க்கப்பட்டு புளு டிக் கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது .
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள டிவிட்டர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் இந்தியா பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது .அதாவது எங்கள் கொள்கையில் நாங்கள் ஒருபோதும் பாகுபாடு பார்ப்பதில்லை என்றும் அதைபோல் எந்தவொரு சித்தாந்த சார்பிலும் அரசியல் பார்வையிலும் செயல்படுவதில்லை என்று விளக்கம் அளித்துள்ளது .
கடந்த சில நாட்களாக வாட்ஸப் மூலமாக அரசியல்வாதிகள் ,எழுத்தாளர்கள் ,சமூக ஆர்வலர்களின் தொலைபேசிகள் உளவுபார்க்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியது .இந்த செயலை இஸ்ரேலை சேர்ந்த ஒரு உளவு நிறுவனம் செய்ததாக ஒரு பெரிய பூகம்பம் வெடித்துள்ளது .
சமூகவலைதளத்தை உபயோகிப்பவர்கள் தொடர்ந்து இவ்வாறு நடப்பதால் “Mastodon” நோக்கி செல்பவர்களின் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது .”Mastodon” என்பது ஒரு சமுகவலைதளம் இது ட்விட்டரை விட மேம்பட்டு இருப்பதாக அந்த நிறுவனம் கூறுகிறது .யாரேனும் தவறு செய்தால் புகார் அளித்த உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பயனர்களின் விவரங்கள் எந்த வகையிலும் உளவுபார்க்கப்படாது என்று “Mastodon” கூறுகிறது.
அதுமட்டுமில்லாமல் “Mastodon” இல் எந்தவிதமான வணிகரீதியான விளம்பரங்கள் காட்டப்படாது என்று உறுதி கூறுகிறது .இந்த நிறுவனம் தொடங்கி 3 ஆண்டுகள் தான் ஆன நிலையில் சமீபகாலமாக பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் நடக்கும் சர்ச்சைகளினால் இந்தியர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது “Mastodon”.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…