இந்தியா தலையிட உக்ரைன் தூதரகம் வேண்டுகோள்!

Published by
பாலா கலியமூர்த்தி

ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அந்நாட்டு அதிபருடன் இந்திய பிரதமர் மோடி பேச வேண்டும் என்று உக்ரைன் தூதரகம் வேண்டுகோள்.

உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா குண்டுகளை வீசி தாக்கும் நிலையில், இந்தியாவுக்கு உக்ரைன் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் புடியுடன் இந்திய பிரதமர் மோடி பேச வேண்டும் என்றும் இந்தியாவிலுள்ள உக்ரைன் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ரஷ்யாவுடன் இந்தியா நல்ல உறவைக் கொண்டுள்ளது. உக்ரைன் நிலைமையை சீர்செய்ய ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெலென்ஸ்கியை பிரதமர் மோடி உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், தற்போதுள்ள நிலை குறித்து உக்ரைன் அதிபருடன், இந்திய பிரதமர் பேசி அறிந்துகொள்ளவும் கூறியுள்ளது.

இதனிடையே, உக்ரைன் – ரஷ்யா இடையேயான பதற்ற நிலை கவலையை தருகிறது என்று ஐநா பாதுகாப்பு சபை இந்திய பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையேயான தற்போதைய சூழல் மிகப்பெரிய சிக்கலுக்கு வித்திடும் என ஐநா சபையில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. நாசகரமான விளைவுகளால் உக்ரைன் மட்டுமில்லை, உலகமே பாதிப்புக்கு ஆளாகும் என ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கைது செய்யப்பட்டவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.” – தவெக மறுப்பு.!

“கைது செய்யப்பட்டவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.” – தவெக மறுப்பு.!

கரூர் : குளித்தலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் சங்கீதா என்பவர் சில நாட்களுக்கு…

2 mins ago

ஜில் ஜில்..கூல் கூல்! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக,…

7 mins ago

தீவிரமடையும் பருவமழை.. அதிகாரிகளுக்கு அதிரடி ஆர்டர் போட்ட துணை முதல்வர்.!

சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

12 mins ago

மக்களே! தமிழகத்தில் (07-10-2024) திங்கள்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர்…

34 mins ago

WWT20 : முதல் போட்டியே படுதோல்வி! இந்திய மகளிர் அணி அரை இறுதிக்கு தகுதி பெறுமா?

துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் நேற்று இந்திய மகளிர் அணி,…

50 mins ago

” சிறுநீரகக் கல்லை கரைக்கும் சிறுகண்பீளை செடி” ஆச்சரியமூட்டும் மருத்துவ குணங்கள்.!

சென்னை-சிறுகண்பீளை செடியின் பயன்கள் மற்றும் குணமாகும் நோய்களைப் பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சிறுகண்பீளை  ;…

1 hour ago