கேரளா மாநிலம் திருச்சூர் ஆராட்டுபுழா கோயில் திருவிழா சிறப்பாக நடைபெற்று கொண்டிருந்தது. இந்த திருவிழாவில் 3 யானைகள் கொண்டுவரப்பட்டு சடங்குகள் நடைபெற்று கொண்டிருந்தன. இந்த யானைகளில் திடீரென ஒரு யானை மதம் பிடித்து மற்றொரு யானையை முட்டியது. இதனால் மற்ற 2 யானைகளும் மிரண்டு வெவ்வேறு திசைகளில் ஓடியதால் திருவிழாவிற்கு கூடியிருந்த பொதுமக்களும் பயந்து அலறியடித்து ஓடத்தொடங்கினர்.
பயந்து ஓடியதில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் குழிகளுக்குள் விழுந்து படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து ஆக்ரோஷமாக காணப்பட்ட யானைகளை பாகன்கள் கடும் நீண்ட போராட்டத்திற்கு பிறகு சமாதானப்படுத்தினர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை போலீசார் யானைக்கு மதம் பிடித்ததற்கான காரணம் குறித்தும் யானை முறையான மருத்துவ பரிசோதனைக்கு பின்பு தான் கோயில் திருவிழா நிகழ்வுக்கு கொண்டு வரப்பட்டதா..? என்றும் அதற்கான மருத்துவ சான்றிதழ்கள் உள்ளதா..? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…