மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜல்பாய்குரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியளவில், பனார்ஹட்-நக்ராகடா வழித்தடத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை மீது ரயில் மோதியது. ரயிலின் வேகம் காரணமாக, தண்டவாளக் கற்கள் மீது இழுத்து செல்லப்பட்ட யானையானது, ரத்தம் சொட்ட சொட்ட மரங்களுக்கு நடுவே நின்று கொண்டிருந்தது.
அதனை கண்ட பொதுமக்கள் சிலர், வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர். தற்பொழுது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், யானைக்கு சிகிச்சை அளித்தனர் ஆனால், படுகாயமடைந்த அந்த யானை, நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. மேலும் அந்த வழித்தடங்களில் நிறைய விபத்துக்கள் ஏற்படும் நிலையில் அங்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத்…
சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக…
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…