கேரளாவில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் இடதுசாரிகள் முன்னணியில் உள்ள நிலையில், முதல்வர் பினராயி விஜயனுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 71 தொகுதிகளில் வெற்றிபெறும் கட்சி, அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கலாம். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே கேரளாவில் இடதுசாரி கூட்டணிகள் அதிகளவிலான இடங்களில் முன்னணி வகிக்கின்றனர்.
அந்தவகையில் கேரளாவில் ஒரு தொகுதியில் கூட பாஜகவினர் முன்னிலை பெறவில்லை. 99 இடங்களில் 81 தொகுதிகளில் இடதுசாரியினர் வெற்றிபெற்றுள்ளனர். 41 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கும் நிலையில், 37 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இதில் கேரள சுகாதார துறை அமைச்சர் கே கே ஷைலஜா, மட்டன்னூர் தொகுதியில் போட்டியிட்ட நிலையில், அவர் 91,689 வாக்குகள் பெற்று, 61,000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிரடியாக வெற்றிபெற்றுள்ளார்.
அதனைதொடர்ந்து கேரளாவில் போட்டியிட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் முதல்வர் பினராயி விஜயன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னணி வகிக்து வருகின்றனர். இதன்காரணமாக மீண்டும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி தொடரும் என்று உறுதியாகிவிட்டது. இந்த தேர்தல் முடிவைப் பலரும் சமூகவலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
மேலும், தொடர்ந்து 2-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள பினராயி விஜயனுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என்று பலரும் பினராயி விஜயனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, கேரளாவில் பல ஆண்டுகளுக்கு பிறகு கம்யூனிஸ்ட் கட்சி, தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆட்சியை பிடித்து, வரலாற்று சாதனை படைத்துள்ளது.
சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…
பாங்காக் : மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தால்…
சென்னை : தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. அதற்குள் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யாராக இருப்பார்கள்…
அகமதாபாத் : குஜராத் டைட்டன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் 2022-ல் தொடங்கப்பட்ட உடன் குஜராத் அணிக்கு கேப்டனாக…
சேலம் : நேற்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில் தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு…