#ElectionBreaking:பஞ்சாப்பில் ஆம் ஆத்மி முன்னிலை-காங்கிரஸ்,பாஜக நிலை என்ன?..!

Default Image

உத்தரப்பிரதேசத்தின் 403 தொகுதிகள், உத்தரகாண்டின் 70 தொகுதிகள்,பஞ்சாப்பில் 117 தொகுதிகள்,மணிப்பூரில் 60 தொகுதிகள், கோவாவில் 40 தொகுதிகளுக்கு முன்னதாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து,உபி,கோவா,பஞ்சாப்,மணிப்பூர்,உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கின.முதலில் தபால் வாக்குகளும்,பின்னர் மின்னணு வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, பஞ்சாப்பில் மொத்தம் 117 தொகுதிகள் உள்ள நிலையில்,அதில்  21 இடங்களில் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் ஆம் ஆத்மி கட்சி  முன்னிலை பெற்றுள்ளது.

அதே சமயம்,காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.மேலும்,பாஜக 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

இதனிடையே,உத்தரபிரதேச மாநிலத்தில் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவின்படி மொத்தம் 403 தொகுதிகள் உள்ள நிலையில்,100 இடங்களுக்கு மேல் பாஜக முன்னிலை வகிக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்