Categories: இந்தியா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

Published by
பாலா கலியமூர்த்தி

CPI : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா வெளியிட்டார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அனைத்து பிரதான அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், அவ்வப்போது மக்களவை தேர்தலுக்கான வாக்குறுதிகளும் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக சிபிஎம் கட்சி தேர்தலை அறிக்கையை வெளியிட்ட நிலையில், தற்போது சிபிஐ கட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, தலைநகர் டெல்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா வெளியிட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாக்குறுதிகள்:

  • குடியுரிமை திருத்த சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தினக்கூலி ரூ.700 ஆக உயர்த்தவும், 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தவும் பாடுபடுவோம்.
  • கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் வகையில் ஆளுநர் பதவி நீக்குவதற்கு போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.
  • புதிய கல்விக்கொள்கை ரத்து.
  • பாஜகவின் வணிகமயமான, மதரீதியிலான கல்வித் திட்டங்கள் திரும்பப் பெறப்படும்.
  • நிதி ஆயோக் கலைத்து விட்டு, திட்டக்குழு மீண்டும் ஏற்படுத்தப்படும்.
  • சுகாதாரம், கல்விக்கான நிதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மக்கள்தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
  • நுழைவுத்தேர்வுகள் உள்ளிட்டவற்றில், மாநில அரசுகளே முடிவெடுக்கும் வகையில் மாநில பட்டியலுக்கு மாற்றப்படும்.
  • ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்துடன் கூடிய மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
  • புதுச்சேரி மற்றும் டெல்லிக்கு தனி அந்தஸ்து.
  • PM கேர்ஸ் நிதி விவரங்கள் பகிரங்கப்படுத்தப்படும்.
  • சமூகநலன் மற்றும் அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் கட்டாயம் என்ற முறை நீக்கப்படும்.
  • அக்னிபாத் திட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மகளிருக்கான 33% இட ஒதுக்கீட்டை உனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பழைய ஓய்வூதியம் திட்டம் மீண்டும் கொண்டுவர பாடுபடுவோம்.
  • நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதி சட்டம் இயற்றப்படும்.

Recent Posts

நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!

நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

14 minutes ago

மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…

2 hours ago

“விஜய்யிடமிருந்து முஸ்லிம்கள் தள்ளி இருங்கள்” – அகில இந்திய முஸ்லிம் ஜமாத்.!

சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…

2 hours ago

அதிரடி காட்டுமா ராஜஸ்தான்.? பேட்டிங் செய்ய களமிறங்கும் டெல்லி.! பிளேயிங் லெவன் இதோ…

டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…

4 hours ago

“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!

சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…

4 hours ago

தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?

டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…

5 hours ago